FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: டாப் 10 போட்டியாளர்கள் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து அன்ஷிதா வெளியேறிய நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.

Updated On : 30 டிசம்பர் 2024, 3:37 pm IST
பிக் பாஸ் போட்டியாளர்கள் - படம் | எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து அன்ஷிதா வெளியேறிய நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ராணவ் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அன்ஷிதா குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வெளியேற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

13வது வாரத்தில் 85வது நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மக்கள் மனங்களை வென்று முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், செளந்தர்யா மற்றும் மஞ்சரி ஆகியோர் வலுவான இடத்தில் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து பவித்ரா ஜனனி, ரயான், ராணவ், வி.ஜே. விஷால், அருண் பிரசாத் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இவர்களில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆட்டத்தை தொடர விரும்பாமல், பணப் பெட்டியுடன் வெளியேறும் நபர் யார் என்பது அடுத்த வார தொடக்கத்தின்போது தெரியவரும். பிக் பாஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே அதிக புரிதல்கள் ஏற்பட்டுள்ளதால், சச்சரவுகள் குறைந்து பொழுதுபோக்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு 4வதுவாரத்தில் வைல்டு கார்டு மூலம் 6 போட்டியாளர்கள் நுழைந்தனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்துக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments