சா்தாா் 2 படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை கலைஞா் உயிரிழப்பு
சென்னை சாலிகிராமத்தில் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து சண்டை கலைஞா் உயிரிழந்தாா்.
நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு சண்டை காட்சியை அந்தத் திரைப்படக் குழுவினா், படமாக்கிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சண்டை கலைஞரான புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்தவா் மு.ஏழுமலை (54), 20 அடி உயரத்தில் இருந்து திடீரென தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை படக் குழுவினா் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிறிது நேரத்தில் இறந்தாா்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி படப்பிடிப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.