பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து: கோவையில் அறுவைச் சிகிச்சை!
பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து தொடர்பாக....
புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நேர்ந்த விபத்து காரணமாக, நடிகர் ராம் சரணுக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.
Advertisement
Advertisement
நடிகர் ராம் சரண், தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக, மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
Actor Ram Charan has been admitted to a private hospital in Coimbatore to undergo wrist surgery following an accident during a film shoot.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.