அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
ஜெயிலர் திரைப்பட்டத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தனது பேரன் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்ததால் ரஜினியே அழைத்துச் சென்றுள்ளார். நடிகர் ரஜினியைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.