அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி உண்மையா? பதிலளித்த அஜித்தின் மேலாளர்!
நடிகர் அஜித்குமார் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணி குறித்த அப்டேட்.
இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன.
சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
Advertisement
கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் வேறு படங்களில் கவனம் செலுத்தினர்.
தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சலார் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித்தின் 64-வது படத்தை இயக்குகிறார் என்றும் அது கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் அஜித்தின் மேலாளரிடம் இது குறித்து விசாரித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். மற்றபடி கூட்டணி, திரைப்படம் என்பதெல்லாம் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.