மதராஸி திரைப்படத்திற்குத் தயாரிப்பு நிறுவனம் சரியான புரமோஷன்களை மேற்கொள்ளவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அமரன் படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படமென்பதால் அவரின் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
ஆனால், மதராஸியின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் சரியான புரமோஷன்களை செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை.
அமரனை வைத்து மதராஸியின் வெளியீட்டு உரிமத்தை அதிக தொகைக்கு விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகவும் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க எந்த விநியோகிஸ்தரும் தயாராக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது. அதற்கு ரசிகர்களிடம் பெரிய ஆவல் இல்லாததற்கு புரமோஷன்களே காரணம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆதங்கத்தைக் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?
sivakarthikeyan's madharasi movie has been dissapointed promotions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.