பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை! போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக போட்டியில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் - 9 நிகழ்ச்சி வரலாற்றில் முதல் முறையாக, போட்டியில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 11 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, புதிய சீசனை தொகுத்து வழங்கி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
10 வது வாரத்தின் இறுதியில் ரம்யா ஜோ, வியானா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
Advertisement
தற்போது 11 வாரத்திற்குள் போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இந்த வாரத்தின் கேப்டனாக கானா பாடகர் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நேரத்தைக் கணிக்கும் போட்டி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் குறிப்பிட்ட நேரத்தை தெரிவிப்பார். போட்டியாளர்கள் கடிகாரம்போல நின்று நேரத்தை துல்லியாகக் கணித்து, பின்னர் மணி அடிக்க வேண்டும்.
இதணைத் தொடர்ந்து நடன மேடையில் நடனம் ஆட வேண்டும். 3 அணியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போட்டியை வெல்லும் அணிக்கு அடுத்த வாரம் நடைபெறும் கேப்டன் போட்டியில் பங்கேற்கலாம்.
இதைத்தவிர்த்து மேலும் ஒரு சலுகையை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த வாரம் போட்டியில் வென்ற அணியிலிருந்து, சிறப்பாக பங்கெடுத்த ஒருவருக்கு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள குடும்ப உறுப்பினர்கள் சுற்றுக்கு வரும் உறவினர்கள் 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் தங்கலாம் என்ற புதிய சலுகையை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
வழக்கமாக, பிக் பாஸ் வீட்டுக்கு வரும் உறவினர்கள் 30 நிமிடங்கள் வரை இருப்பார்கள், ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக, 24 மணி நேரம் இருக்கும் இந்த அறிவிப்பை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியும் உற்சாகமுகம் அடைந்த போட்டியாளர்கள், இந்த வார போட்டியை வெல்ல தீவிரமாக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
For the first time in the history of the Bigg Boss - 9 show, Bigg Boss has introduced a change in the competition.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.