மறுதணிக்கைக்குச் சென்ற பராசக்தி!
பராசக்தி மறுதணிக்கை செய்யப்படுகிறது...
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தை மறுதணிக்கைக்கு படக்குழு அனுப்பியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் மொழிக்கு எதிரான மொழித்திணிப்பைக் கேள்விகேட்கும் கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்காராவின் முந்தைய படங்கள் கொடுத்த நம்பிக்கையை இப்படம் கொடுத்திருப்பதால் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது சென்சார் அதிகாரிகள் நிறைய இடங்களில் வசனங்களையும் அரசியல் கருத்துகளையும் நீக்கச்சொன்னதால் பராசக்தி தயாரிப்பு நிறுவனம் மறுதணிக்கைக் குழுவிற்கு இப்படத்தை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.