ரஜினி - சுந்தர் சி பட விலகலில் ஆபாசமான கருத்து: குஷ்பு பதிலடி!
சமூக வலைதள கிண்டலுக்கு, நடிகை குஷ்பு கூறியதாவது...
நடிகர் ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்களை உருவாக்கியுள்ளன.
இந்த சம்பவத்தில் குஷ்புவை தொடர்புப்படுத்தி, ஆபாசமான கிண்டல்கள் நடந்து வருகின்றன. இதற்கு நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து தலைவர் 173 படத்தினை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர், திடீரென சுந்தர் சி படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த எதிராபாராத நிகழ்வுகளினால், சமூக வலைதளத்தில் சுந்தர் சி, ரஜினி மீது கேலி, கிண்டல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் ரஜினி குத்துப் பாட்டுக்கு குஷ்பு வேண்டுமென கேட்டதால்தான், சுந்தர் சி விலகியதாக மீம்ஸ்களில் கிண்டலாக கருத்துகள் பரவின.
இந்தக் கருத்தைப் பதிவிட்ட நபரின் பதிவுக்கு நடிகை குஷ்பு, “ இல்லை. உங்கள் வீட்டில் இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைத்து...” எனப் பதிலளித்துள்ளார்.
இந்தப் பதில் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி வருகிறது.
Thalaivar 173 Sundar C issue, Netizens memes strong reply by actress kushboo.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.