மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ்! புதிய இணையத் தொடர் துவக்கம்!
பீக்கி பிளைண்டர்ஸ் புதிய இணையத் தொடரின் படப்பிடிப்பு குறித்து...
பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடரின் புதிய பருவங்களின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்டீவன் நைட் எழுதிய கதைகளின் அடிப்படையில் உருவான பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்கள் உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்தன.
இந்த நிலையில், புதிய கதைகளத்துடன் மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ் தொடர்கள் படம்பிடிக்கப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 1953 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகும் இந்தப் புதிய இணையத் தொடர் 2 பருவங்களாக (சீசன்) வெளியாகவுள்ளன.
Advertisement
Advertisement
இதில், ஒவ்வொரு பருவத்திலும் 6 எபிசோடுகள் வெளியாகும் எனவும், ஒவ்வொரு எபிசோடுகளும் 1 மணிநேரம் நீளமுடையதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் புதிய தொடரில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பீக்கி பிளைண்டர்ஸ் கதைகளின் அடிப்படையில் நடிகர் சிலியன் மர்ஃபி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!
Filming for the new seasons of the popular Peaky Blinders TV series is expected to begin soon, it has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.