மாரி செல்வராஜ் 
செய்திகள்

அரசியலுக்கு வருவீர்களா? மாரி செல்வராஜ் பதில்!

மாரி செல்வராஜ் அரசியல் குறித்து பேச்சு...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மாரி செல்வராஜ் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றவர் மாரி செல்வராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள பைசன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையை மையமாக வைத்து கபடி வீரரின் கதையைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், இத்திரைப்படம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறும் என்பதிலும் மாரி செல்வராஜ் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மாரி செல்வராஜிடம், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு மாரி செல்வராஜ், “என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு பெரிய போதை. பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்க விரும்புகிறேன். அதனால், அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால், இயக்குநர் பா. இரஞ்சித் வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

director mari selvaraj spokes about his politics entry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்பை லாரி மோதி பெண் உயிரிழப்பு

நவ.14-இல் நொய்டாவில் உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிச் சுற்று

சென்னை - சேலம் விமான சேவை நேரம் அக்.26 முதல் மாற்றம்

தெற்கு தில்லி: செப்டம்பரில் குற்றச் சம்பவங்கள் 20% குறைவு

தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

SCROLL FOR NEXT