சல்மான் கான் - நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
சல்மான் கானின் புதிய திரைப்படம் குறித்து...
இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தொடர்ந்து, வம்சி அடுத்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இருந்தார்.
Advertisement
தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. சல்மான் கானே இத்தோல்விக்கு காரணம் என ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். இதற்கு, சல்மான் தரப்பிலிருந்தும் முருகதாஸுக்கு பதிலடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.