38 ஆண்டுகள் கழித்தும்... மனைவியுடான புகைப்படத்தைப் பகிர்ந்த மோகன்லால்!
மோகன்லால் பகிர்ந்த புகைப்படம் குறித்து....
நடிகர் மோகன்லால் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியான எம்புரான், துடக்கம், ஹிருதயப்பூர்வம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
தற்போது, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து பேட்ரியாட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன் மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ள மோகன்லால் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில், அவரின் திருமண நாளான இன்று சுதந்திர தேவியின் சிலைக்கு அருகே மனைவியுடன் நின்றுகொண்டிருந்த படத்தை வெளியிட்டு, “38 ஆண்டுகள் கழித்தும், இப்போதும் புதிதாக துவங்கியதைப் போலவே உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயாவும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Mohanlal has shared a photo with his wife.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.