மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!
மௌனம் பேசியதே மறுவெளியீடு குறித்து...
காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படம் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூர்யாவின் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டன. முக்கியமாக, காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது படத்தைக் கவனிக்க வைத்தது.
இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படத்தை பிப். 13 ஆம் தேதி மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.