நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்தை துபையில் சந்தித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் ஏகே - 64 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முன் துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், துபை செல்லும் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை அங்கு சந்தித்து வருகின்றனர். அண்மையில், நடிகர்கள் மாதவன், நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் அஜித்தைச் சந்தித்து கார் பந்தய அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் துபையில் அஜித்தைச் சந்தித்துள்ளார்.
இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருவதுடன் வைரலாகியும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.