அல்லு அர்ஜுனைச் சந்திக்க நிபந்தனைகள்? மறுப்பு தெரிவித்த நடிகர் தரப்பு!
அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை...
நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் அட்லியுடன் இணைந்துள்ளார். ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார். இது, ரூ. 800 கோடியில் உருவாகிறதாம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அல்லு அர்ஜுனைச் சந்திக்கச் செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது உள்பட 42 நிபந்தனைகள் கொண்ட அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றலில் இருக்கிறது.
இதனால், அல்லு அர்ஜுனை விமர்சித்து பதிவுகள் வரத் தொடங்கின. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், “நடிகர் அல்லு அர்ஜுனைச் சுற்றி பரவும் வதந்திகள் முற்றிலும் போலியானவை. இதனைச் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தயவுசெய்து போலியான தகவல்களிடமிருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.