நடிகை மிருணாள் தாக்குர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.
காதலர் நாளில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக வதந்திகள் பரவிய நிலையில் தனுஷுடன் நடிக்க மிருணாள் தாக்குர் விருப்பம் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
பாலிவுட்டில் நடித்துவரும் தனுஷ் சில நிகழ்ச்சிகளில் மிருணாள் தாக்குரை சந்தித்தது ரசிகர்களிடையே பேசுபொருளானது.
தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்
இந்நிலையில், தனது ’தோ திவானே சேஹர் மெயின்’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்ற மிருணாள் தாக்குர் பேசியிருப்பதாவது:
ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர், அசுரன் படங்களைப் பார்த்தபிறகு நான் தனுஷின் மிக மிகப் பெரிய ரசிகையாக மாறினேன்.
அசுரன் படத்தினை பலமுறை பார்க்க முடியும். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவர் ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடனமாடுபவர், நடிகர், இயக்குநர் ஆகவும் இருக்கிறார்.
எனக்காக வந்தார்...
தனுஷ் சார் தேரே இஷ்க் மெயின் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். அவரிடம் எனது சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் திரையிடலுக்கு வர முடியுமா எனக் கேட்டேன். அவர் வருவாரென நான் நினைக்கவில்லை. அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
நிஜமாகவே அவரிடன் ஒருநாள் நடிக்க வேண்டுமென மிகவும் விரும்புகிறேன்.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அடிப்படை ஆதராமற்ற வதந்தியாக முடிவடைந்துள்ளது.
மிருணாள் தாக்குர் நடித்துள்ள புதிய படம் இன்று (பிப்.20) திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.