அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார். இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மதுரையில் நிறைவு செய்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், வடசென்னை செட்கள் அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பாளர் தாணு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால், விரைவாக இந்தாண்டு இறுதிக்குள் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.