3 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆல்பம்..! பிடிஎஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி!
பிடிஎஸ் இசைக்குழுவினரின் புதிய ஆல்பம் குறித்து...
தென் கொரியாவில் இருக்கும் பிடிஎஸ் எனும் கே-பாப் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
இவர்களது புதிய ஆல்பம் 2022க்குப் பிறகு இந்தாண்டு மார்ச்சில் வெளியாகுமென கொரிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவில் 18-35 வயதுக்குள் ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடிஎஸ் குழுவினரும் தங்களது சேவையை முடித்துவிட்டு வந்தனர்.
Advertisement
Advertisement
கடைசியாக இந்தக் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது மார்ச் 20ஆம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Popular K-pop band BTS is all set to make a comeback on March 20 by releasing a new album, their first since "Proof" in 2022.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.