தென் கொரியாவில் இருக்கும் பிடிஎஸ் எனும் கே-பாப் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
இவர்களது புதிய ஆல்பம் 2022க்குப் பிறகு இந்தாண்டு மார்ச்சில் வெளியாகுமென கொரிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவில் 18-35 வயதுக்குள் ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடிஎஸ் குழுவினரும் தங்களது சேவையை முடித்துவிட்டு வந்தனர்.
கடைசியாக இந்தக் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது மார்ச் 20ஆம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.