சிவகார்த்திகேயன் தெளிவாக இருக்கிறார்: மணிரத்னம்
சிவகார்த்திகேயன் குறித்து மணிரத்னம்....
இயக்குநர் மணிரத்னம் நடிகர் சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், “நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் கதைகளைத் தேர்வு செய்கிறார். நான் அவரின் படங்களைக் கவனித்து வருகிறேன். அதேபோல், நடிகர் ரவி மோகன் பல நட்சத்திரங்கள் இணையும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.