முகப்பு
செய்திகள்

மோகன் ஜி-க்காக தெறி மறுவெளியீட்டுத் தேதியை மாற்றிய தாணு!

திரௌபதி - 2 திரைப்படத்திற்கு ஆதரவளித்த தாணு...

Updated On : 19 ஜனவரி 2026, 2:52 pm IST
பகிர்:

இயக்குநர் மோகன் ஜியின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பாளர் தாணு மாற்றியுள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான திரௌபதி - 2 திரைப்படம் வருகிற ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அன்றைய நாளே நடிகர் விஜய்யின் தெறி திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

ஜன நாயகன் வெளியாகாததால் நிச்சயமாக தெறிக்கு வரவேற்பு இருக்கும் என்பதால் இயக்குநர் மோகன் ஜி எக்ஸ் பக்கத்தில், “புதிய திரைப்பட தயாரிப்பாளர்களும் வளர்ந்துவரும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர் தாணு பல நலவுதவிகளைச் செய்திருக்கிறார். திரௌபதி - 2 ஜன. 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்றே தெறி திரைப்படம் மறுவெளியீடாகிறது. தாணு சார், எங்கள் திரைப்படத்திற்கு பெரிய திரைகள் கிடைக்க வேண்டுமென்றால் தெறி வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை” எனப் பதிவிட்டார்.

இதனைக் கண்ட தாணு, “புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி” எனக் கூறினார்.

இதனால், தெறி வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதேநேரம், திட்டமிட்டபடி திரௌபதி - 2 திரைக்கும் வருகிறது.

தாணு செய்த இந்த உதவியைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை நேரில் சந்தித்து, அவரது ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

summary

producer thanu supports draupathi - 2 release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments