வாரணாசி: 80 நாள்களில் நிறைவடையவுள்ள படப்பிடிப்பு!
வாரணாசி திரைப்படம் குறித்து ராஜமௌலி பேசியுள்ளார்...
இயக்குநர் ராஜமௌலி வாரணாசி திரைப்படத்தின் படப்பிடிப்பு நாள்கள் குறித்து பேசியுள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “வாரணாசி”.
மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா உள்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கின்றார்.
இந்த நிலையில், இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ராஜமௌலி, “வாரணாசியின் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் முடிந்தது. இன்னும், கதையை இணைக்க வேண்டிய காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டும். அடுத்த 80 நாள்களில் படப்பிடிப்பு நிறைவுபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
Director Rajamouli has spoken about the shooting schedule of the film Varanasi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.