முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பு நிறைவு! ஜூலை வெளியீடாக ஆர்யா - 40?

ஆர்யா - 40 குறித்து....

Updated On : 8 ஜூன் 2026, 3:11 pm IST
நடிகர்கள் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி
பகிர்:

நடிகர் ஆர்யாவின் 40-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.

தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்தில் ஆர்யா நடித்து வந்தார். ராஜா ராணி திரைப்படம் போல் காதல் திரைப்படமாக உருவாகும் இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்பட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Filming for actor Arya's 40th movie has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.