முகப்பு
செய்திகள்

சின்ன திரையில் களமிறங்கிய நடிகை அம்பிகா!

நடிகை அம்பிகா மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளது குறித்து...

Updated On : 10 மார்ச், 2026 at 9:59 AM
சிந்து பைரவி தொடரில் நடிகை அம்பிகா
பகிர்:

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்த நடிகை அம்பிகா, சின்ன திரையில் மீண்டும் களமிறங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான சிந்து பைரவியில் முக்கிய பாத்திரத்தில் அம்பிகா நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களைப் பெற்றவர் நடிகை அம்பிகா. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அம்பிகா நடித்துள்ளார்.

தொடக்கத்தில் கவர்ச்சி நாயகியாக இருந்த இவர், பின்னர் குடும்பப் படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் இருந்து விலகாமல், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் அருவி, நாயகி உள்ளிட்ட சில தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார். தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் அம்பிகா நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சிந்து பைரவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில், திரவியம், பவித்ரா, ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நடிகை பவித்ரா சிந்து என்ற பாத்திரத்திலும் நடிகர் திரவியம், சிவா என்ற பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்தத் தொடரின் தற்போதைய கதைக்களத்தின்படி, சிந்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக சிவா நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்டுள்ளார். சிந்துவிடம் இருந்து சிவாவுக்கு விவாகரத்து வேண்டும் என வழக்குரைஞர் வாதாட, நடிகை அம்பிகா சிந்துவுக்கு ஆதரவாக வாதாடுவதைப்போன்று சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிந்து பைரவி தொடரில் வழக்குரைஞராகவே அம்பிகா நடிக்கிறார்.

அம்பிகாவின் வருகையால் சிந்து பைரவி தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரைக்கு நடிக்க வந்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்துகளை தெரிவித்து வருகின்றனர்.

summary

Actress Ambika makes her act in Vijay TVs Sindhu Bairavi serial

முழு கட்டுரையைப் படிக்க →