அப்போதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன்: ஸ்ரீலீலா
எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஸ்ரீலீலா...
நடிகை ஸ்ரீலீலா தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினைத் துவங்கியவர், நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திரைத்துறைக்கு வந்தார்.
இதற்கு முன்பாகவே 2019 இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.
Advertisement
Advertisement
தமிழில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, மருத்துவ பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, “ஆரம்பத்தில் நான் நடித்த திரைப்படங்களை யாராவது விமர்சித்து என்னை எதிர்மறையாக பேசும்போது கண்ணீர் விட்டிருக்கிறேன். பின், விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எப்படி கையாள வேண்டுமென கற்றுக்கொண்டதும் அவை என்னைப் பாதிப்பதில்லை. தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை புறக்கணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
actor sreeleela about starting stage of negativity around her
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.