கேன்ஸ்-ல் திரையிடப்படும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம!
பாலன் தி பாய் திரைப்படம் குறித்து...
பாலன் தி பாய் திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Advertisement
தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் பாலன் தி பாய் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதன் கதையை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், இப்படம் வருகிற மே 14 ஆம் தேதி கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.