சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?
ஜன நாயகனுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து...
இணையத்தில் கசிந்ததால் ஜன நாயகன் திரைப்படத்துக்கு ரூ. 70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
பின், மொத்த ஜன நாயகன் படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ. 120 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாம். இணையத்தில் நல்ல தரத்திலேயே படம் கிடைப்பதால் ஓடிடி பார்வைகளின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக, ரூ. 50 கோடிக்கு உரிமத்தை வாங்க நெட்பிளிக்ஸ் முன்வந்துள்ளதாம்.
இதனால், ஜன நாயகன் திரைப்படத்திற்கு ரூ. 70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் மே வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்றே தெரிகிறது.