இந்த வார இறுதியில் நிறைவடையும் சிவசக்தி தொடர்!
சிவசக்தி - திருவிளையாடல் தொடர் நிறைவடையவுள்ளது குறித்து...
ஆன்மிக புராணத் தொடரான சிவசக்தி - திருவிளையாடல் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.
உலகத்தின் முதல் காதல் கதையான சிவன் மற்றும் சக்தியின் தெய்வீகப் பயணத்தை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தத் தொடரானது, தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு சிவசக்தி - திருவிளையாடல் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
சிவன் பாத்திரத்தில் ராம் யஷ்வர்தன், சக்தி பாத்திரத்தில் பார்வதியாக சுபா ராஜ்புத் நடிக்கிறார்கள். ஸ்வாரஸ்யமான திரைக்கதையோடு, அதிக பொருள் செலவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவசக்தி - திருவிளையாடல் தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடனும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சிவசக்தி தொடர், இந்த வார இறுதியில் மார்ச் 29 ஆம் தேதி நிறைவடைகிறது.
சிவன் - பார்வதி எப்படி ஒன்றுசேரப் போகிறார்கள்? திருமணம் எப்படி நடக்கப்போகிறது? என்பது குறித்த பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் சிவசக்தி - திருவிளையாடல் தொடர் நிறைவடையவுள்ளது.