வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!
சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான வினா - விடை வங்கி...
1. உலகின் நாகரிகங்களும் அவற்றின் காலமும்...
1. மெசபடோமியா நாகரிகம் (3500 - 2000 BC)
2. எகிப்திய நாகரிகம் (3100 - 1100 BC)
Advertisement
Advertisement
3. சீன நாகரிகம் (1700 - 1122 BC)
4. சிந்து சமவெளி நாகரிகம் (3300 - 1900 BC)
2. உலகின் நாகரிகங்கள் பழமையானதிலிருந்து வரிசைப்படுத்துக...
1. மெசபடோமியா நாகரிகம்
2. சிந்து சமவெளி நாகரிகம்
3. எகிப்திய நாகரிகம்
4. சீன நாகரிகம்
3. ஹரப்பா குறித்து முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
சார்லஸ் மேசன்
4. ஹரப்பாவுக்கும் மொஹஞ்சதாராவுக்கும் ஒற்றுமை இருப்பதை கண்டறிந்தவர் யார்?
சர் ஜான் மார்ஷல் (1924)
5. இந்திய தொல்லியல் துறை யாரால் தொடங்கப்பட்டது?
அலெக்சாண்டர் கன்னிங்ஹம்
6. இந்திய தொல்லியல் துறை தொடங்கப்பட்ட ஆண்டு?
1861
7. இந்திய தொல்லியல் துறையின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
புது தில்லி
8. மெக்ரகார்க் எங்கு அமைந்துள்ளது?
பலோச்சிஸ்தான், பாகிஸ்தான்
9. விவசாயம் செய்ததற்கான ஆதாரம் கிடைத்த இடம் எது?
மெக்ரகார்க்
10. மிகப் பெரிய தானியக் களஞ்சியம் அமைந்துள்ள இடம்?
ஹரப்பா
11. ராக்கிகார்கி எங்கு அமைந்துள்ளது?
ஹரியாணா
12. மிகப் பெரிய பொதுசபைக் கூடம் அமைந்துள்ள இடம்?
மொஹஞ்சதாரோ
13. கப்பல் கட்டும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
லோத்தல், குஜராத்
14. லோத்தல் எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது?
சபர்மதி
15. Civilization என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன்
16. நடன மங்கையின் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
மொஹஞ்சதாரோ
17. சிந்து சமவெளி மக்கள் அறிந்திராதவை?
குதிரை, இரும்பு
18. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது?
காப்பர்
19. கர்னேலியன் என்பது என்ன?
சிவப்பு குவார்ட்ஸ் ஸ்டோன்
20. மண் பானையின் நிறம் மற்றும் டிசைனிற்கு பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் எவை?
சிவப்பு, கருப்பு
21. ஒரு பொருளின் வயதைக் கண்டறிய உதவும் முறை?
கதிரியக்க கார்பன் முறை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.