எல்டிஎஃப் ஊழல் மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும்: பிரியங்கா காந்தி
எல்டிஎஃப் ஊழல் மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும் என பிரியங்கா காந்தி விமர்சித்தது குறித்து...
இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) அரசு ஊழல் மிகுந்தது என்பது குழந்தைக்குக்கூட தெரியும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளம், கல்பெட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுவதைவிட, பெருநிறுவனங்களுக்காக செயல்படும், முற்றிலும் ஊழல் மிகுந்த அரசாங்கமாக மாறிவிட்டது. இதை கேரளத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தெளிவாக புரிந்துகொள்ளும்.
Advertisement
Advertisement
வயநாடு மக்களவை உறுப்பினராகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, உங்களில் பலரை முடிந்தவரை சந்திக்கவும், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
நிச்சயமாக, இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இருப்பினும், நான் மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி, இந்தக் கவலைகளைப் புரிந்துகொள்ளும்போது, எல்.டி.எஃப். அரசாங்கத்தின் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்பதை என்னால் காணமுடிகிறது” எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் தேர்தல் பிரசாரத்துக்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Congress MP Priyanka Gandhi has criticized the Left Democratic Front (LDF) government, stating that even a child knows it is corrupt.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.