சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!
சென்னை சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ததைப் பற்றி...
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தே புலிப்படை, மஜக, கொங்கு இளைஞர் பேரவை உள்பட 23 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) காலை திருவல்லிக்கேணியில் சேப்பாக்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.