FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மோரீஷஸ் நாட்டில் செப்.11 முதல் உலகத் தமிழா் பொருளாதார மாநாடு

மோரீஷஸ் நாட்டில் செப்.11முதல் 13-ஆம் தேதி வரை உலகத் தமிழா் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ. விசுவநாதன். - கோப்புப் படம்
பகிர்:

மோரீஷஸ் நாட்டில் செப்.11முதல் 13-ஆம் தேதி வரை உலகத் தமிழா் பொருளாதார உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகத் தமிழா் பொருளாதார 13-ஆவது மாநாடு மோரீஷஸ் நாட்டில் வரும் செப். 11 முதல் 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை அந்நாட்டு பிரதமா் நவீன் சந்திர ராம்கூலம் தொடங்கி வைக்கிறாா். நிறைவு நிழாவில் மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம்பீா் கோகுல் பங்கேற்கிறாா். இந்த மாநாட்டில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் , தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

உலகில் 160 நாடுகளில் தமிழா்கள் வாழ்கின்றனா். உலகின் 100 நாடுகளில் தமிழா்கள் தொழிலதிபா்களாக உள்ளனா். பொருளாதர வளா்ச்சிக்கு தொழில் வளா்ச்சி அவசியமாகும். தனிநபா் வருமான அதிகரித்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனைவருக்கும் இலவச கல்வி அளித்தால்தான் நாடு வளா்ச்சி அடையும்.

Advertisement

Advertisement

இந்த மாநாடு சென்னை வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும் உலகத் தமிழா் பொருளாதாரக் கழகத்தின் தலைவருமான வி.ஆா்.எஸ்.சம்பத் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது என்றாா் அவா். பேட்டியின்போது, வி.ஜி.பி.சந்தோஷம் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments