இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்
இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து...
இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப். 8) தெரிவித்தார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கொளத்தூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப். 8) வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது உதயநிதி பேசியதாவது:
Advertisement
''அப்பாவுக்கு வாக்கு கேட்டு தொண்டனாக வந்துள்ளேன். தமிழகத்துக்கு முன்னுதாரணமாக உள்ள தொகுதி. தேர்தலில் எதிரணியினரை ஓட ஓட விரட்ட வேண்டும். கொளத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்
முதல்வராக பொறுப்பேற்றதும் மு.க. ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்குத்தான். அன்று முதல் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இம்முறை ஆட்சி அமைந்தால், மகளிர் தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளும் வகையில் ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் இல்லத்தரசி திட்டம் கொண்டுவரப்படும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மத்திய பாஜக அரசு இதற்கு துணை நிற்கவில்லை.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் உள்ளன. பிரசாரத்துக்காக கூடி கலைந்த கூட்டமாக இது இருக்கக் கூடாது. களத்தில் மக்கள் இறங்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் மக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாட்டின் முதல்வரை தேர்வு செய்யப்போகும் தொகுதி கொளத்தூர். உதய சூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலினை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என உதயநிதி பேசினார்.