மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மின்னணு இயந்திரங்களில் 2-வது நாளாக மறுஆய்வு
கொளத்தூர் தொகுதியில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணிகள் குறித்து...
சென்னை கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது நாளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். இருப்பினும், 74,202 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றார்.
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனு வைத்தார். இதன்படி, 001, 004, 017, 028, 032, 075, 078, 079, 084, 087, 112, 122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடி மையங்களின் மின்னணு இயந்திரங்கள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதனையடுத்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்யும் பணி புதன்கிழமையில் (ஜூலை 29) தொடங்கியது. ஒரு நாளுக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் 7 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொடங்கிய சரிபார்ப்புப் பணி, மு.க. ஸ்டாலின் உள்பட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
Verification of EVMs in M.K. Stalin's Kolathur constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.