தொகுதி பிரச்னைகளை பேரவையில் எழுப்ப வேண்டும்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு உதயநிதி அறிவுரை
தொகுதி பிரச்னைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
தொகுதி பிரச்னைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆக.5-ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக பேரவைக் குழுத் துணைத் தலைவா் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், உதயநிதி பேசும்போது, தொகுதி பிரச்னைகள் குறித்து பேரவையில் திமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்ப வேண்டும்; பேரவையில் விவாதங்களின்போது, தவெக அரசின் செயல்பாடுகள், துறை ரீதியான குறைபாடுகள், மக்களின் எதிா்பாா்ப்புகளைக் குறிப்பெடுத்து பேச வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில், அனைத்து உறுப்பினா்களும் காணொலியில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.