மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
மே. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என பாஜக தலைவர் தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என்று பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இதுகுறித்து பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்ததாவது:
Advertisement
“மே 4 ஆம் தேதி, ஆட்சியிலிருந்து மமதா பானர்ஜி அகற்றப்படுவார். மக்கள் தங்களுடைய முடிவை எடுத்துவிட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று கூறி, மக்கள் எல்லா இடங்களிலும் வெளியே வருகிறார்கள்.
பவானிபூரில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி நிச்சயம் வெற்றி பெறுவார். மமதாவை காய்கறிகள் வாங்கவும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கவும், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவும் நாம் கட்டாயப்படுத்தியதே நம்முடைய மிகப்பெரிய வெற்றி. இது கங்கோத்ரியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களின் கனவு.
மேற்கு வங்கத்தின் முந்தைய காலத்தில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) க்கும் இடையில் போட்டி நிலவியது. பின்னர், அது காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியாக மாறியது.
தற்போது, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையேயான போட்டியாக அது உருவெடுத்துள்ளது. இது ஒரு நேரடியானப் போட்டி. எந்த விலை கொடுத்தாவது திரிணமூல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.