வேலை... வேலை... வேலை... கோவை நீதிமன்றத்தில் வேலை
கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Computer Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,100 - 65,500
தகுதி: கணினி அறிவியல், கணினி அம்பிளிக்கேஷன் பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.எஸ்சி., பி.காம் பட்டம் பெற்று கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் இளநிலை (Junior) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Xerox Machine Operator - 15
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/coimbatore என்ற இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Prinicipal District Judge, Principal District Court, Combatore - 641 018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.08.2018
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.