முகப்பு
வேலைவாய்ப்பு

கல்லூரியில் பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 டிசம்பர் 2021, 10:30 am IST
பகிர்:


 
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பஷன் டெக்னாலஜி
மொத்த காலியிடங்கள்: 190

தகுதி: பேஷன் டிசைன், ஜூவல்லரி டிசைன், புட்வியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், லெதர் டிசைன், ஸ்பேஸ் டிசைன், பிலிம் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேசன், அட்வர்டைசிங் போன்ற பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள. 

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 31.1.2022 தேதியின்படி, 40க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர், போபால், கௌகாத்தி.

விண்ணப்பிக்கும் முறை: www.cmsnift.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. பெண்கள், எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments