வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 1828 அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1828 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1828 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணி: சிறப்பு அதிகாரி(Specialist Officers)
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 1823
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. I.T Officer - 220
2. Agricultural Officer - 884
3. Rajbasha Adhikari - 84
4. Law Officer - 44
5. HP/Personnel Officer - 61
6. Marketing Officer - 535
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக இளநிலை, முதுநிலை, எம்பிஏ, எம்எம்எஸ், பொறியியல் பட்டதாரிகள், சட்டப்பிரிவில் எல்எல்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2021
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை,மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி.
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2022
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.