வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... துணை ராணுவ படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவ படைகளில் ஒன்றான் பிஎஸ்எஃப்-இல் காலியாக உள்ள 2788 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவ படைகளில் ஒன்றான் பிஎஸ்எஃப்-இல் காலியாக உள்ள 2788 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable (Tradesmen)
மொத்த காலியிடங்கள்: 2788(ஆண்கள் - 2651, பெண்கள் - 137)
Advertisement
Advertisement
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள்: 167.5 செ.மீ உயரமும், 78 முதல் 83 செ.மீ மார்பளவுவும், 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள்: 157 செ.மீ உயரமும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8.30 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2022
இதற்கு விண்ணப்பிக்கலாம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.