FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையில் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2022, 4:00 pm IST
பகிர்:


இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையில் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Systems Engineer
காலியிடங்கள்: 22
துறைவாரியான காலியிடங்கள்:
1. Mechanical - 11
2. ECE, EEE - 11
சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

பணி: Systems Engineer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

Advertisement

Advertisement

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர் முதலில் டிரெய்னி சிஸ்டம் இன்ஜினியராக நியமிக்கப்பட்டு 4 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பின்னர் நிரந்த பணி வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.brahmos.com/careernew என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 21.07.2022க்கு முன்பு பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Chief General Manager, Brahmos Aerospace, Delhi Cantt, New Delhi - 110 010.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments