நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?
பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும், 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர எண்.140
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Nursing Staff
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பி.எஸ்சி நர்சிங் படிப்புடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பிஎஸ்சி நர்சிங்க் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தங்களது படிப்பை மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Chittaranjan National Cancer Institute(CNCI), Kolkata - 700 156.
நேர்முகத் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: Senior Nursing Staff பணிக்கு 07.06.2022 மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.