FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 43 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச் 2022, 2:40 pm IST
தேசிய மனி உரிமை ஆணையம்
பகிர்:

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 43 மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Translators

காலியிடங்கள்: 43

Advertisement

Advertisement

மொழி வாரியான காலியிடங்கள் விவரம்: 
* குஜராத் - 03
* கனடம் - 02
* தமிழ் - 07
* தெலுங்கு - 05
* மராத்தி - 02
* பெங்காலி - 12
* ஒரியா - 10
* உருது, காஷ்மீரி - 01
* அசாமீஸ் - 01

தகுதி: இளநிலைப்பட்டம், ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மொழியில் நல்ல அறிவு இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்:  மொழிபெயர்ப்புடன் தட்டச்சு செய்யப்பட்ட ஆயிரம் வார்த்தைகளுக்கு ரூ.350 கௌரவ சம்பளமாக வழங்கப்படும். 2022 டிசம்பர் மாதம் வரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணியின் செயல்பாடுககளின் அடிப்படையில் மேலும் நீட்டிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://nhrc.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Under Secretary (Establishment), National Human Rights Commission, Manav Adhikar Bhawan, C-Block, GPO Complex, INA, New Delhi-110023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://nhrc.nic.in/sites/default/files/Empanelment_of_Translators_11032022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments