வேலைவாய்ப்பு

999 செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து முதல்கட்டமாக அவா்களில் 1,000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்தது. இதைத் தொடா்ந்து, 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிப்போருக்கு வயதுவரம்பு 1.7.2026-ன்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் என மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Applications are invited only through online mode up to 08.02.2026 for recruitment to the post of Nursing Assistant Grade II in Tamil Nadu Medical subordinate Service.

இதயத்தில் துளையுடன் பிறக்கும் குழந்தைகள்! ஏன்? பிறவி இதய நோய் காரணங்களும் அறிகுறிகளும்...

“தோல்வி பயத்தில்தான் மடிகணினி வழங்கப்பட்டது!” எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் பந்துவீச்சு!

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்: விஜய்

ஆளுநர் உரையுடன் தொடங்குவதை ஒழிக்க வேண்டும்: முதல்வர் ஆவேசம்

SCROLL FOR NEXT