ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி; உதவித்தொகையுடன் அட்டகாசமான வாய்ப்பு!
வடக்கு மத்திய ரயில்வேயிக்கு சொந்தமான பணிமனைகளில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி குறித்து...
வடக்கு மத்திய ரயில்வேயிக்கு சொந்தமான பணிமனைகளில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பயிற்சி வழங்கப் பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: RRC/NCR/ Act.Apprentice 01/2026
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
Advertisement
Advertisement
மொத்த காலியிடங்கள்: 1853
வயது வரம்பு: 7.7.2026 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். ரயில்வே விதிமுறைப்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcpryi.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். அதற்கு முன்னர் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் ஐடிஐ தகுதியை பதிவுசெய்து கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Apprenticeship Opportunities...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.