விண்ணப்பித்துவிட்டீர்களா? இரும்பு ஆலைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பயர்மேன் கம் பயர், என்ஜின் ஓட்டுநர், உதவி மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் பணிகள் என 259 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சேலம் இரும்பு ஆலை, சத்தீஸ்கரில் உள்ள பிலாய் இரும்பு ஆலை, மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூர் பெரோ அலாய் ஆலைகளில் காலியாக உள்ள அட்டண்டன்ட் கம் டெக்னீசியன், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பயர்மேன் கம் பயர், என்ஜின் ஓட்டுநர், உதவி மேலாளர், மருத்துவ அதிகாரி, ஆலோசகர் பணிகள் என 259 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 259
வயதுவரம்பு: 24 முதல் 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் மற்றும் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: http://sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.12.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.