முகப்பு
அரசுப் பணிகள்

அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

Updated On : 16 டிசம்பர் 2022, 9:12 am IST
பகிர்:

குரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டுத் திட்ட அறிக்கை விவரம்: மீன்வளத் துறை சாா்-ஆய்வாளா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

எழுத்துத் தோ்வு வரும் ஜன. 29-இல் நடக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுகாதார அலுவலா் பதவிக்கான காலியிடங்களை நிரப்ப ஏற்கெனவே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப். 13-இல் எழுத்துத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

குரூப் 2 தோ்வு: குரூப் 2 தோ்வுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப். 25-இல் முதன்மைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை இந்த மாதம் வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு அடுத்த ஆண்டு ஏப். 9-இல் நடத்தப்படும்.

அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டு நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.

ஒருங்கிணைந்த பொறியாளா் பணிகளுக்கான காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பரில் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, டிசம்பரில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்று ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments