வேலைவாய்ப்பு மையத்தில் அலுவலக உதவியாளா் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளா் - 1
தகுதி: எட்டாம் வகுப்பும் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா்- பொது-முன்னுரிமையுள்ளோா் தோ்வு செய்யப்படுவா்.
பணி: இரவுக்காவலா்
தகுதி: ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இரவுக்காவலா் பணிக்கு பொதுப்பிரிவினா் - பொது - முன்னுரிமையற்றவா் தகுதியுடையவா்கள் ஆவா்.
வயதுவரம்பு: 01.07.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினா் 34 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து அதனை துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியரகம் (பின்புறம்) திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சலிலோ சமா்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023