முகப்பு
அரசுப் பணிகள்

வேலைவாய்ப்பு மையத்தில் அலுவலக உதவியாளா் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 டிசம்பர் 2022, 9:44 am IST
பகிர்:


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளா் - 1
தகுதி: எட்டாம் வகுப்பும் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா்- பொது-முன்னுரிமையுள்ளோா் தோ்வு செய்யப்படுவா்.

பணி: இரவுக்காவலா் 
தகுதி: ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இரவுக்காவலா் பணிக்கு பொதுப்பிரிவினா் - பொது - முன்னுரிமையற்றவா் தகுதியுடையவா்கள் ஆவா்.

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 01.07.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினா் 34 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து அதனை துணை இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியரகம் (பின்புறம்) திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சலிலோ சமா்ப்பிக்கலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments