மதுரையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயலும் மாடுபிடி வீரர்கள்.போட்டியில் சுமார் ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருள்கள் வழங்கப்படது.ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது.என்னை தொட்டுப்பார் என்று சொல்லி களத்தில் நின்று விளையாடிய காளைகள்.போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் என இரண்டு கார்கள் பரிசு வழங்கப்பட்டது.காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி 10 சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது.போட்டியில் கலந்துகொள்ள வந்த காளைகளின் உரிமையாளர்கள்.காளை மருத்துவபரிசோதனை பகுதி, பார்வையாளர்கள் பகுதி என அனைத்து பகுதிகளிலும் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.