மனதுக்கு பிடித்தவருக்கு பரிசுகளை தந்து மகிழ்வது, மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய நிறத்தில் உடைகள் அணிவது, வாழ்த்து பரிமாறுவது என காதலர் தினத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
காதலர் தினம் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தை தரும் தினம் என்றால் அது மிகையல்ல.காதலர் தினத்தில் காதலை மீண்டும் துளிர்விட செய்யும் நிகழ்வு மிகவும் அழகானது, ஆழமானது.
Advertisement
இதய வடிவிலான பொருட்களை வாங்கி, மனம் மகிழம் இளசுகள்.விதவிதமான பரிசு பொருட்கள் வாங்கி செல்லும் பெண்கள்.உலகம் முழுவதும் அன்பைக் கொண்டாடுபவர்கள் எல்லோருமே காதலர் தினத்தைக் கொண்டாடியும், மகிழ்ந்தும் வருகின்றனர்.
பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதிகளும் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொள்வர்.இளசுகளின் மனதை மீண்டும் மீண்டும் துளிர்விட காரணமாக அமையும் ஆர்டின் வடிவிலான பரிசு பொருட்களை வாங்கி மனம் மகிழும் பெண்கள்.காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
காதலரும், காதலித்து திருமணம் செய்தவர்களும் தங்களது வாழ்க்கை துணைக்கு வாழ்த்துகள் பரிமாறவும், பரிசுகள் கொடுத்தும் மகிழ்ந்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.என் இதயம் அவளிடத்திலும், அவள் இதயம் என்னிடத்திலும்...